ஐரோப்பிய கால்பந்து போட்டி: 2-வது சுற்று நாளை தொடக்கம்.

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 11-ந்தேதி தொடங்கியது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த தொடர் 11 நாடுகளில் நடந்து வருகிறது.

24 அணிகள் ஆறு பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம் பெற்றன. ஒவ்வொரு அணியும் தன் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (நாக்- அவுட்) முன்னேறும். அதே போல் அனைத்து பிரிவிலும் 3-ம் இடம் பிடித்த அணிகளில் சிறந்த நான்கு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். நாக்அவுட் சுற்றில் மொத்தம் 16 அணிகள் விளையாடும்

நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த இத்தாலி, வேல்ஸ் (ஏ பிரிவு), பெல்ஜியம், டென்மார்க் (பி), நெதர்லாந்து, ஆஸ்திரியா (சி), இங்கிலாந்து, குரோஷியா (டி), சுவீடன், ஸ்பெயின் (இ), பிரான்ஸ், ஜெர்மனி (எப்) ஆகிய 12 அணிகளும் 3-ம் இடம் பிடித்த அணிகளில் சிறந்த நான்கு அணிகளாக சுவிட்சர்லாந்து (ஏ), உக்ரைன் (சி), செக்குடியரசு (டி), போர்ச்சுக்கல் (எப்) ஆகிய 4 அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.

துருக்கி, பின்லாந்து, ரஷியா, வடக்கு மாசிடோனியா, ஸ்காட்லாந்து, ஸ்வோவக்கியா, போலந்து, ஹங்கேரி ஆகிய 8 அணிகள் வெளியேற்றப்பட்டன.

16 அணிகள் மோதும் 2-வது சுற்று ஆட்டங்கள் நாளை தொடங்குகிறது. வருகிற 29-ந்தேதி வரை நடக்கும் 2-வது சுற்றில் 8 போட்டிகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி கால் இறுதிக்கு முன்னேறும்.

நாளை இவு 9.30 மணிக்கு ஆம்ஸ்டர்டாமில் நடக்கும் ஆட்டத்தில் ஏ மற்றும் பி பிரிவுகளில் முறையே 2-ம் இடத்தை பிடித்த வேல்ஸ்-டென்மார்க் அணி கள் மோதுகின்றன.

அதே போல் நள்ளிரவு 12.30 மணிக்கு லண்டனில் தொடங்கும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்த இத்தாலியும், ‘சி’ பிரிவில் 2-ம் இடம் பிடித்த ஆஸ்திரியாவும் பலப் பரீட்சை நடத்துகின்றன.

Leave A Reply

Your email address will not be published.