யூரோ கோப்பை கால்பந்து டென்மார்க், இத்தாலி அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்.

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் ஆம்ஸ்டர்டாமில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் டென்மார்க் அணி, வேல்சை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் சக வீரர் டாம்ஸ் கார்டு தட்டிக்கொடுத்த பந்தை டென்மார்க்கின் கேஸ்பர் டோல்பெர்க் கோல் அடித்து அதிர்ச்சி அளித்தார்.
பிற்பாதியில் 48-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் டோல்பெர்க் மீண்டும் ஒரு கோல் அடித்தார். கடைசி கட்டத்தில் டென்மார்க்கின் ஜோகிம் மாலே 88-வது நிமிடத்திலும், பிராத்வெயிட் 90-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இறுதியில், டென்மார்க் 4-0 என்ற கோல் கணக்கில் வேல்சை பந்தாடி காலிறுதிக்குள் நுழைந்தது.

இன்று அதிகாலையில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி, ஆஸ்திரியா அணிகள் மோதின. வழக்கமான நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

ஆட்டத்தின் 95வது நிமிடம் மற்றும் 105-வது நிமிடத்தில் இத்தாலி அணி தலா ஒரு கோல் அடித்தது. ஆஸ்திரியா அணி 114வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டுமே அடித்தது.
இறுதியில், இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

Leave A Reply

Your email address will not be published.