நகைகளைத் திருடிய இருவர் கைது!

வீடொன்றிலிருந்து சுமார் 13 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடியக் குற்றச்சாட்டில் இருவரைப் தனமல்வில பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

தனமல்வில் சரவோதைய வீதிக்கு அருகிலுள்ள வீட்டிலேயே திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனமல்வில, கதிர்காமம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30, 43 வயதுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்னர்.

இதன்போது அவர்கள் திருடிய நகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.