கருப்புப் பூஞ்சை நோயினால் 40 ஆயிரம் பேர் பாதிப்பு.

இந்தியாவில் கருப்புப் பூஞ்சை நோயினால் 40 ஆயிரம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி ,கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டமொன்று நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் ஏனைய அமைச்சர்களான ஹர்தீப் எஸ் பூரி, நித்யானந்ராய், அஸ்வினி குமார் சவ்பே உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

அதன்போது கருத்து தெரிவித்த ஹர்ஷவர்தன், நாடு முழுவதும் கருப்புப் பூஞ்சை நோயினால் இதுவரை 3 ஆயிரத்து 129 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.