“பயணத்தடை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர், பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

மாகாண எல்லைகளை கடக்க முயற்சிக்கும் வாகனங்கள் தொடர்ந்து திருப்பியனுப்பப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகளுக்காக இயங்கும் வாகனங்கள் மட்டுமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

நாடு முழுவதிலுமான பயணத் தடை ஜூன் 21 திங்கட்கிழமை நீக்கப்பட்டு ஜூன் 23 அன்று மீள் அமுல்படுத்தப்பட்டு ஜூன் 25 ஆம் திகதி மீண்டும் நீக்கப்பட்டது.

மேலும் இருப்பினும், மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடை இன்னும் நீக்கப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.