இணையம் ஊடாக சிறுமி விற்பனை! ஒருவர் கைது.

கல்கிசையில் 15 வயதுச் சிறுமி ஒருவரை பணத்துக்காக இணையம் ஊடாக விற்பனை செய்த சம்பவத்தில் மிஹிந்தலை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் லலித் எதிரிசிங்க உள்ளிட்ட மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த சம்பவத்தில் முன்னதாக சிறுமியின் தாய் உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அது தொடர்பாக விசேட காவல்துறை குழு ஒன்று விசாரணைகளை ஆரம்பித்தது.

இதன்படி குறித்த சிறுமியை விற்பனை செய்ய முயற்சித்த 54 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளின் படி, குறித்த நபர் கடந்த 3 மாதங்களில் அந்த சிறுமியை 30 பேரிடம் விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

சிறுமி தொடர்பான விளம்பரத்தில் 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபா வரையில் விலை கோரப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.

மேலும் ,இதனையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.