பிறந்தநாள் கொண்டாடிய 19 பேர் அதே விடுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

அல்லைப்பிட்டியில் உள்ள விடுதியில் பிறந்தநாள் கொண்டாடிய 19 பேர் அதே விடுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு குறித்த விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற 19 பேர் நண்பர் ஒருவரின் பிறந்தநாள் நிகழ்வை கொண்டாடுவதற்கு முற்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து அப்பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர், ஊர்காவற்துறை பொலிஸாருடன் சென்று தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக 19 பேரையும் அதே விடுதியில் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கையை மேற்கொண்டார்.

மேலும் ,இந்நிலையில், சுயதனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் பீசிஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.