சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலில் இருந்து ஓய்வு பெறுகின்றார் மத்தியுஸ்?

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து சிந்தித்து வருவதாக அஞ்சலோ மத்தியுஸ் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு அறிவித்துள்ளார்.

இது குறித்து ஆராய்ந்துவருகின்றேன் விரைவில் இது குறித்து அறிவிப்பேன் எனஅவர் தெரிவித்துள்ளார்.

அஞ்சலோ மத்தியுசை ஒரு நாள் போட்டிகளிற்கு தெரிவு செய்யாதது கடும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
அவர் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவந்தார்,2019 உலக கிண்ணப்போட்டிகளில் இலங்கைஅணியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக அவரே விளங்கினார்,

மத்தியுஸ் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு மறுத்துவருகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.