ஒரு வாரமாகக் காணாமல்போன நெடுந்தீவு மீனவர் சடலமாக தமிழகக் கடற்கரையில் மீட்பு.

இம்மாதம் முதலாம் திகதி முதல் காணாமல்போன நெடுந்தீவு மீனவர், தமிழகம் வேதாரணியம் கடற்கரையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நெடுந்தீவு, 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சில்வெஸ்ரர் மரியதாஸ் என்ற மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த முதலாம் திகதி முற்பகல் 10 மணியளவில் நெடுந்தீவு கடற்கரையிலிருந்து கட்டுமரம் ஒன்றில் அவர் தொழிலுக்குச் சென்றுள்ளார்.

எனினும், அவர் கடந்த ஒரு வாரமாக கரை திரும்பவில்லை என்று குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அவரது சடலம் தமிழகம்2 வேதாரணியம் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் தொடர்பில் இந்திய கரையோரக் காவல் படையினர் மற்றும் வேதாரணியம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.