ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்குமான தடுப்பூசி வழங்கும் நிகழ்வு.

கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்தின் கீழ் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்குமான தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்திலும், கிளிநொச்சி சாந்தபுரம் இராணுவ வைத்தியசாலையிலும், பூநகரி பிரதேச செயலர் பிரிவில் பூநகரி மத்திய கல்லூரியிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்தின் கீழ் ஆசிரியர்கள் பணியாளர்கள் என 3328 பேர் கடமையாற்றுகின்றனர் எனவே இவர்கள் மேற்படி நிலையங்களில் ஏதாவது ஒன்றுக்குச் சென்று தங்களுக்குரிய தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள
முடியும் என கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியல்வைத்திய அதிகாரி மருத்துவர் நிமால் அருமைநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.