இலங்கை திரும்பியவர்களில் மேலும் 42 பேருக்குத் தொற்று.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் 42 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று 1,557 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 1,515 பேர் புத்தாண்டு கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும், எஞ்சிய 42 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனாத் உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 71 ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 27 ஆயிரத்து 57 ஆக உயர்வடைந்துள்ளது.

இதனிடையே தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 41 ஆயிரத்து 35 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.