யாழ். பல்கலை மாணவர்கள் இருவருக்குக் கொரோனா!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் உட்பட்ட 185 பேருக்கு நேற்றுமுன்தினம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவர்களில் 173 பேருக்குத் தொற்றில்லை என்றும், 12 பேர் மீள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும் முடிவுகள் வெளிப்படுத்தியிருந்தன.

இந்நிலையில், நேற்று யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மீளவும் 12 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

முடிவுகளின் அடிப்படையில் மாணவன் ஒருவரும், மாணவி ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே மேலும் ஒருவருக்கு மீளவும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.