முன்னரை விடவும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்படும் இலங்கை.

‘டெல்டா’ வகை நாட்டில் முதன்மை கொரோனா வைரஸ் தொற்றாக உருவெடுக்கின்றது. இதனால நாடு முன்னர் எதிர்கொண்டதை விடவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும்.

இவ்வாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் பல பகுதிகளிலும் ‘டெல்டா’ கொரோனா மாறுபாடு பதிவாகி வரும் நிலையில், பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது பொருத்தமற்றது.

தற்போதைய நிலையில், தடுப்பூசித் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்தியுள்ள பல நாடுகளும் ‘டெல்டா’ வைரஸ் பரவலைத் தடுக்க பயணக் கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.

நாட்டின் தற்போதைய நிலை புறக்கணிக்கக்கூடிய சூழ்நிலை அல்ல. மிகவும் ஆபத்தான நிலைமையை நாடு எதிர்கொண்டுள்ளது.

அரசும் கொள்கை வகுப்பாளர்களும் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதையும், பொதுமக்கள் அனைத்தையும் மறந்து வருவதையும் காண்கின்றோம்.

இந்தச் சூழ்நிலையை அரசும் மக்களும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு பேரழிவு சூழ்நிலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அது நாட்டில் மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.