ஆன்லைனில் பீர் மதுவகையை ஆர்டர் செய்த 61 வயது முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இந்தியாவில் ஆன்லைனில் பீர் மதுவகையை வாங்க முயன்ற முதியவர் மோசடி செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த 61 வயதான முதியவர் ஒருவர் கூகுளில் தேடி மும்பை கெம்ப்ஸ் கார்னர் பகுதியில் இருந்த மதுபான கடையின் தொடர்பு எண்ணை எடுத்து அவர்களை தொடர்பு கொண்டு பீர் ஆர்டர் கொடுத்திருக்கிறார்.

இணையத்தில் மோசடி நபர்கள் பொதுவாக மக்களை ஏமாற்றுவதற்காக மளிகை, மதுபான கடைகள் பெயரில் தங்களுடையைய சொந்த மொபைல் எண்களை இப்படி கொடுப்பார்கள் என்பதை அறியாத அந்த முதியவரும் பீர் ஆர்டர் கொடுப்பதற்காக தொடர்பு கொண்டிருக்கிறார்.

எதிர்முனையில் கடையின் ஊழியர் போல காட்டிக்கொடு பேசிய நபர், பீர் ஆர்டர் பெறுவதற்கு முன்பணம் செலுத்த வேண்டுமென கூறி அவருடைய வங்கி கணக்கு விபரங்களையும், ஒன் டைம் பாஸ்வோர்டையும் பெற்று அந்தன் மூலம் 58,400 ரூபாயை சுருட்டிவிட்டார்.

வங்கிக்கு பாஸ்புக் அப்டேட் செய்ய சென்ற போது மோசடி செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து முதியவர் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து கம்தேவாலி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.