யாழ். மாநகர சபையில் அஞ்சலி.

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இதில் பிரதி மேயர் ரி.ஈசன் உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டு படுகொலையான தமிழர்களை நினைவு கூர்ந்து, சுடரேற்றி, மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.