யாழில் வெலிக்கடைப் படுகொலையின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு!

1983ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தின்போது வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தலைவர் தங்கத்துரை ஆகியோரின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் அலுவலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களது திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, விளக்கேற்றி அஞ்சலி செய்யப்பட்டது.

குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் கனகேந்திராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.