நன்கொடையாக வழங்கிய 1.6 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது.

சீனா இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கிய 1.6 மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசி சீனாவில் இருந்து இன்று முற்பகல் 10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துசேர்ந்தது.

இந்த தடுப்பூசி தொகுதியை உத்தியோகபூர்வமாக சீன தூதுவர் சுகாதார அமைச்சரிடம் வழங்கினார்.

இதுதவிர, 1.6 மில்லியன் சிரிஞ்ச்களையும் சீனாவால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இன்றுவரை இலங்கை பெற்ற மொத்த சினோபார்ம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டியுள்ளது.

இதேவேளை இந்த தொகுதி மூலம் ஒரு இலட்சம் தடுப்பூசி யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கும் சாத்தியம் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.