மட்டக்களப்பு கள்ளியங்காடு “ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்” சிறுவர் உலகம் மீண்டும் ஆரம்பம்!

மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் அமையப்பெற்றுள்ள “ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்” சிறுவர் உலகம் மீண்டும் நாளை (30) காலை 9.00 மணி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடந்த சில மாதாங்களிற்கு முன்னர் சிறுவர்களுக்கான உல்லாச உலகம் எனும் தொனிப்பொருளிற்கு அமைய 12 இற்கு மேற்பட்ட விளையாட்டுக் கூடங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட “ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்” சிறுவர் உலகம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்தது.

அதேவேளை படிப்படியாக நாடு மீண்டும் வழமைக்குத் திரும்பிவரும் நிலையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி 25% வீதமான சிறுவர்கள் மாத்திரம் விளையாட்டுகளில் பங்குபற்றும் வகையில் “ஹப்பி கிட்ஸ் பஃன் வேல்ட்” மீண்டும் நாளை முதல் திறக்கப்படவுள்ளதாகவும், வினோத விளையாட்டுக்களில் தங்களது பிள்ளைகளை மகிழ்விக்க விரும்பும் பெற்றோர், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுக் கூடங்களில் விளையாடலாம் என்பதையும் அதன் நிருவாகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.