பால்மா தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் விசாரணை.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளரின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாணம், கல்வியங்காடு, கோப்பாய், அச்சுவேலி, நீர்வேலி ஆகிய பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு பால்மா தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டதுடன் விற்பனைக்கு மறுத்தமை மற்றும் சட்டவிரோதமாக வர்த்தக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் எரிவாயு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் பரிசோதனை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.