மேலும் இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட் தொற்று.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மேலும் இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

யஸ்வெந்தர் சஹல் மற்றும் கிருஸ்ணப்பா கெளத்தம் ஆகியோருக்கே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ,இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்ட க்ருணல் பாண்ட்யாவிற்கு அண்மையில் கொவிட் தொற்று உறுதியாகியது.

அதையடுத்து, அவருடன் நெருங்கி பழகிய 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களில் இருவருக்கு தற்போது கொவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ,க்ருணல் பாண்ட்யாவிற்கு கொவிட் உறுதியாகிய நிலையில், இருபதுக்கு இருபது போட்டியொன்று பிற்போடப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.