யாழ்.குடாநாட்டில் 50 பேர் உட்பட வடக்கில் 69 பேருக்குத் தொற்று.

வடக்கு மாகாணத்தில் 69 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் நேற்று 351 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி யாழ். மாவட்டத்தில் 50 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 03 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 05 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 04 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும், முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் (இராணுவத்தினர்) 06 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.