ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரனினால், துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ள மற்றுமொரு யுவதி

ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரனினால், துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ள 29 வயதான மற்றுமொரு யுவதி 2009ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை பணிப் பெண்ணாக ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்து வந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த யுவதி தான் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக  நேற்றைய தினம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பை அண்மித்த களனி பகுதியில் வேலை செய்துக்கொண்டிருந்த குறித்த யுவதியிடமிருந்து , பொலிஸாரினால் நேற்று வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.