இரண்டு தலைகளுடன் பிறந்துள்ள அதிசய கன்றுக்குட்டி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த புதூா் பூங்கணை ஊராட்சிக்குட்பட்ட புதூா் கிராமத்தில் வசித்து வருபவா் சதீஷ்(35). இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனா். இவா் விவசாயம் செய்து வருகிறாா்.

இவா் வளா்த்து வந்த பசுமாட்டிற்கு அதிசய கன்றுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. அதற்கு இரண்டு தலை, நான்கு கண்கள் இரண்டு வாய்கள் உள்ளன.

ஒட்டியுள்ள இரண்டு தலைகளுடன் அதிசயமாக பிறந்துள்ள தகவல் காட்டுத்தீ போல் அருகில் இருக்கும் கிராமங்களுக்கு பரவியது.

பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அதிசயக் கன்றுக்குட்டியை கண்டு வியப்புடன் பாா்த்து செல்கின்றனா்.

Leave A Reply

Your email address will not be published.