அடிகாயங்களுடன் வீதியோரத்தில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

கொஸ்கொடை பொலிஸ் பிரிவுக்ககுட்பட்ட பான்வெல்துவ – சுதுவெலிபொத வீதிக்கு அருகில் இன்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

போகஹவெல, ஊரகஸ்மன்ஹங்திய பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய குடும்பஸ்தரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பலப்பிட்டிய நீதிமன்ற நீதிவானினால் மரண விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

உயிரிழந்தவரின் முகத்தில் அடிகாயங்கள் காணப்படுகின்றன. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபரை அடையாளம் கண்டு கைதுசெய்வதற்காகக் கொஸ்கொட பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments are closed.