கடற்படையைச் சேர்ந்த ஐவர் மட்டும் சிகிச்சையில் – 901 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 05 கடற்படை சிப்பாய்கள் மாத்திரம் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கடற்படை சிப்பாய்களின் எண்ணிக்கை 901ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனாத் தொற்றுக் காரணமாக வைத்தியசாலைகளில் மொத்தமாக 906 கடற்படையினர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

901 கடற்படை சிப்பாய்கள் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, மேலும் 14 நாட்களுக்கு அவர்கள் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டனர்.

Comments are closed.