இறுதிக்கட்டத்தை அடைந்த ஹிஷாலினியின் விசாரணைகள் − அடுத்த நகர்வு என்ன?

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் மர்மமான முறையில் தீ காயங்களுடன் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தொடர்பிலான விசாரணைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக உயர் பொலிஸ் உத்தியோகத்தரை மேற்கோள்காட்டி, அத தெரண செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான அறிக்கை, எதிர்வரும் நீதிமன்ற விசாரணைகளின் போது சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த தலைமையில் நடத்தப்பட்ட விசாரணைகளில், சுமார் 40 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.