எஸ்.ரி.எப். அதிரடி! 17 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

ராகம லன்சியாவத்த பிரதேசத்தில் வீடொன்றில் கட்டிலுக்குக் கீழாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 10 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 40 வயதான சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, இந்தச் சுற்றிவளைப்பு இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர் வாடகை அடிப்படையில் குறித்த வீட்டைப் பெற்று, நீண்டகாலமாக இந்தக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விசேட அதிரடிப்படையின், கோணஹேன முகாம் அதிகாரிகளால் இந்தக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி 17 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.