நடுரோட்டில் செருப்பால் அடித்த மாமியார்… அதிர்ச்சியில் உறைந்த மருமகன்…

உத்தரபிரதேசத்தில் ஹர்தோய் மாவட்டத்தின் நீதிமன்ற வளாகத்தில் மாமியார் மற்றும் மருமகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில், மாமியார் மருமகனை செருப்பால் அடித்துள்ளார்.

இதுதொடர்பாக கிடைத்த தகவலின்படி, உத்தரபிரதேசத்தில் கோட்வாலி பகுதியில் உள்ள அனங்க்பெட்டா கிராமத்தின் மஜ்ரா பண்டித்பூர்வா பகுதியை சேர்ந்தவர் சந்த் பாபு, இவருக்கும் ஹரியவானில் உள்ள பீலமஹுவா கிராமத்தில் வசிக்கும் ஹினா பானோவுக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இதனிடையே, கடந்த இரண்டு மாதங்களாக சந்த் பாபு, தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அவரது மனைவி ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தொடர்ந்து, நடந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் தனது கணவர் மீது காவல் நிலையத்தில் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் செய்திருந்தார்.

இதனிடையே, சம்பவத்தன்று சந்த் பாபு, தனிப்பட்ட வேலைகளுக்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவரது மாமியாரை நேரில் சந்தித்துள்ளார்.

தனது மகளை சந்த் பாபு, அடித்த கோபத்தில் இருந்த மாமியார், தனது செருப்பைக் கழற்றி, சந்த் பாபுவை அடித்துள்ளார். இந்த சம்பவத்தை அங்கு வந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். இதையடுத்து, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட சந்த் பாபு, மாமியார் தாக்கியது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, நடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.