யானை தாக்கியதில் 6 பிள்ளைகளின் தந்தை வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பு பெரிய புல்லுமலையை சேர்ந்த 58 வயதுடைய 6 பிள்ளைகளின் தந்தை யானை தாக்குதலுக்கு இலக்காகி மகோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது வயலுக்கு காவலுக்காக சென்ற போது யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

யானை தாக்குதலுக்கு இலக்கானவர் படுகாயமடைந்த நிலையில் நோய்காவு வண்டியில் மகோயா வைத்தியசாலைக்கு சிகிட்சைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை மனித தாக்குதல் சம்பவங்களினால் பல மனிதர்களும் சில யானைகளும் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.