யானைகளின் அட்டகாசத்தினால் வீடு சேதம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலக நிருவாக எல்லைக்கு உட்பட்ட 35 ஆம் கிராம கண்ணகிபுர மக்களின் குடியிருப்புக்களை யானைகள் இலக்குவைத்து சேதப்படுத்தும் அவலநிலை
நடைபெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேளையில் மக்களின் குடியிருப்புக்களை நோக்கி வருகை தந்திருந்த யானைகள் ஒரு வீட்டை சேதப்படுத்தியது மாத்திரமல்லாது விட்டுத் தோட்டங்களையும் பலத்த சேதத்திற்கு உள்ளாக்கியுள்ளன.

சம்பவம் நடைபெற்ற வீட்டினுள்
நித்திரையில் உறங்கியவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.