தொலைபேசி திருடி விற்ற இருவர் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் தொலைபேசி திருடி விற்ற இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சண்டிலிப்பாய் சீரணி அம்மன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றில் கடந்த வாரம் தொலைபேசி திருடப்பட்டது.

குறித்த தொலைபேசி திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரைச் சங்கானைப் பகுதியில் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளதுடன் தொலைைபேசியையும் மீட்டு மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.