யாழில் இளம் குடும்பஸ்தர் விஷம் அருந்தி உயிரிழப்பு!

யாழ்., வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் மேற்கு – கல்விளான் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் விஷம் அருந்திய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

33 வயதுடைய ப.நிரோஜன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.