காரைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு புதிய மூன்று மாடி கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது (Photos)

காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் புதிய மூன்று மாடி கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு 12.08.2021 வியாழக் கிழமை (நேற்று) இடம்பெற்றது
காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் பிரதேச வைத்திய அதிகாரி டாக்டர் என் அருந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி சுகுணன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
புதிதாக அமைக்கப்படவிருக்கும் மூன்று மாடிக் கட்டடத் தொகுதியில் நிர்வாகப் பகுதி, வெளி நோயாளர் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு ஆகியன ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்த புதிய கட்டடம் பேராசிரியர் கலாநிதி வரகுணம் மற்றும் குடும்பத்தினரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நிலத்தில் நிர்மாணிக்கப்பட உள்ளதுடன் குறித்த புதிய மூன்று மாடிக் கட்டிடத்திற்கு பேராசிரியர் கலாநிதி வரகுணம் அவர்களின் பெயரும் சூட்டப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.