இறந்த தாத்தாவின் சடலத்தை ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாத்த பேரன்! துர்நாற்றம் வீசியதால் அம்பலமான விடயம்… அதிர்ச்சி காரணம்

இந்தியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த தாத்தாவின் சடலத்தை பேரன் ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாத்த சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் பரக்காலாவை சேர்ந்தவர் பாலய்யா (68), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தனது பேரன் நிகில் (26) என்பவருடன் ஒரு வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாலய்யா உடல்நலக்குறைவால் இறந்தார். ஆனால் இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் என்ன செய்வது என அறியாமல் தவித்த நிகில், தாத்தாவின் உடலை தங்களது வீட்டின் ஃப்ரிட்ஜில் வைத்துள்ளார்.

ஓரிரு நாட்கள் கழித்து பாலய்யா வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பொலிசார் பாலய்யா வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர்.

அப்போது ஃப்ரிட்ஜில் பாலய்யா சடலம் குறுகிய நிலையில் அடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தாத்தா இறந்தது வெளியில் தெரியவந்தால் அவருக்கு வரும் பென்ஷன் பணம் நிறுத்தப்படும் என்பதால் நிகில் இப்படி செய்தாரா என்ற கோணத்திலும் விசாரித்து வரும் பொலிசார் பாலய்யாவின் இறப்பை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.