யாழில் திருத்தலங்களுக்குப் பிரதமரால் தலா 10 இலட்சம் ரூபா நிதி உதவி!

வரலாற்றுச் சிறப்புமிக்க திருத் தலங்களான யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் தேவஸ்தானம் மற்றும் யாழ் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் ஆகியற்றுக்கு தலா பத்து இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகளைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடமிருந்து பெற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்துள்ளார்.

இரண்டு ஆலயங்களுக்கும் சென்ற அமைச்சர் இதற்கான காசோலைகளை வழங்கிவைத்தார்.

சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்துக்கமைய பௌத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் மேற்குறித்த இரண்டு ஆலயங்களுக்கும் தலா பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.

பிரதமரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி உ தவியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.