வசந்த முதலிகே உட்பட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் எதிர்வரும் 31ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடுவளை நீதிவான் மஞ்சுள ரத்னாயக்கவின் முன்னிலையில் காணொளி தொழில்நுட்பத்தினூடாக சந்தேகநபர்களை இன்று ஆஜர்படுத்தியபோது, விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டபோது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் காயப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.