ரயில்வே ஊழியர்கள் 360 பேருக்குக் கொரோனா! – மூவர் மரணம்

ரயில்வே திணைக்களத்தில் இதுவரையில் 360 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்கள் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ள காரணத்தால் 10 ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இவ்வாறு மூடப்பட்ட ரயில் நிலையங்களில் கரையோர மார்க்கத்திலான 5 ரயில் நிலையங்களும் அடங்குகின்றன என்றும் ரயில்வே பொது முகாமையாளர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.