வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை.

காத்தான்குடியில் 60 வயதுக்கு மேற்பட்ட வீட்டை விட்டு வெளியில் வரமுடியாது இருப்பவர்களுக்கு வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.நபீல் தலைமையில் அவரின் மேற்பார்வையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.பசீர் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் இதன் போது வீடு வீடாகச் சென்று இத் தடுப்பூசி போடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.