சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா, கொரோனா தொற்றினால் காலமானார்

கொழும்பு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான திரு கே.வி.தவராசா அவர்களின் துணைவியார். கெளரி தவராஜா இன்று காலமானார்.

தமிழரசியல் கைதிகளின் வழக்குகள் உட்பட பல முக்கியமான வழக்குகளில் ஆஜராகி வாதிட்டு நியாயத்தை பெற்றுக்கொடுத்தவர். நீதித்துறையில் பிரபல்யமாக திகழ்ந்த கெளரி தவராஜா திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்தார்.

கணவன் மனைவியான சட்டத்தரணி தரவராசா சட்டத்தரணி கௌரி ஆகிய இருவரும் தமிழ் அரசியில் கைதிகளின் விடுதலைக்காக நீண்ட காலமாக வழக்குகளில் ஆஜராகி வருகின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.