யாழில் நேற்று 102 பேருக்குக் கொரோனாத் தொற்று!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 102 பேருக்கு நேற்று (23) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 737 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய யாழ். மாவட்டத்தில் 102 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 27 பேருக்கும், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவருக்கும், வவுனியா மாவட்டத்தில் 05 பேருக்கும், கிளிநொச்சி – இரணைமடு விமானப்படை முகாமில் 07 பேருக்கும், மன்னார் கடற்படை முகாமில் 02 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.