“சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்”

லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தைகளுக்கான  சுவாச நிபுணர் டாக்டர் சன்னா டி சில்வா, சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் அல்லது விளம்பரப்படுத்தப்படும் மருந்துகளை குழந்தைகளுக்கு ஒருபோதும் கொடுக்கக் வேண்டாம் என்றும் குழந்தைகளுக்கு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் கொடுக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கோவிட் வேகமாக பரவுவதால், குழந்தைகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளதாகவும், ஒரு குழந்தைக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், அவர் தகுதியான மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும் என்றும் நிபுணர் டாக்டர் சன்னா டி சில்வா கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலாநிதி சன்ன டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.