ஐந்து பிரதேச செயலாளர் பிரிவில் 7680 குடும்பங்கள் 2000 உதவித் தொகையை பெறுவதற்கு தகுதி..

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுவதாக மாவட்டச் செயலாளர் அ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.

மன்னாரில், ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த ஏழாயிரத்து 680 குடும்பங்கள் 2000 ரூபாய் உதவித்தொகையை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதற்காக, சுமார் 15 மில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக இரண்டு மில்லியன் ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்டச் செயலாளர் அ.ஸ்ரான்லி டிமெல் மேலும் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.