அனுமதி இன்றி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தக நிலையங்கள் மீது வழங்குபதிவு.

நாடளாவிய ரீதியில் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உரிய அனுமதி இன்றி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தக நிலையங்கள் மீது மன்னார் பொலிஸாரால் வழங்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் நகர் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வந்த நிலையில் உரிய அனுமதி பத்திரம் இன்றி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன் வர்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதே நேரம் அத்தியாவசிய காரணங்கள் இன்றி வெளியில் நடமாடிய நபர்களும் எச்சரிக்கப்பட்டு பொலிஸாரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.