இசாலினி மரண வழக்கில் முக்கிய சந்தேகநபருக்கு கொரோனா! பிணையும் மறுப்பு

டயகம சிறுமி இசாலினி மரணத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதினின் மாமாவிற்கு பிணை வழங்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

குறித்த நபருக்கு பிணை கோரும் மனு இன்று கொழும்பு நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில் ஆராயப்பட்ட போது பிணை வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி தமது கட்சிக்காரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் முதலாவது தடுப்பூசியை மாத்திரம் பெற்றுள்ளதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி பிணை கோரினார்.

எனினும் நீதவான் அந்த கோரிக்கையை நிராகரித்து சந்தேகநபரை பிணையில் விடுதலை செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.