துப்பாக்கிகள், தோட்டாக்கள், கைக்குண்டுடன் ஒருவர் கைது!

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஐந்து துப்பாக்கிகள், 22 தோட்டாக்கள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு என்பவற்றுடன் சந்தேகநபர் ஒருவரைக் கேகாலை பொலிஸார் (29) கைதுசெய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கேகாலை, ரம்புக்கனை பிரதேசத்திலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கேகாலை தலைமையகப் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றிலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

37 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.