வாள் வெட்டில் உயிரிழந்தவரின் அஸ்தி பாதுகாப்புடன் கொட்டடி மயானத்துக்கு.

யாழ்., குருநகர் பகுதியில் வாள்வெட்டில் உயிரிழந்த இளைஞரின் அஸ்தி கொட்டடி மயானத்துக்குப் பாடை
கட்டி மேள வாத்தியத்துடன் படையினரின் பாதுகாப்புடன் இன்று (29) எடுத்துச் செல்லப்பட்டது.

குருநகர்ப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஜெரோன்
(வயது 24) என்கின்ற இளைஞரே உயிரிழந்த நிலையில் மரணத்தின் பின்னரான பரிசோதனையில் அவருக்குக் கொரோனாத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

உயிரிழந்தவரின் உறவுகள் ஐயம்கொண்டு நீதிமன்றத்தை நாடியதால் மீ ண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உடல் கொரோனா விதிமுறையின் கீழ் தகனம் செய்யப்பட்டு அதன் அஸ்தி உறவுகளிடம் கையளிக்கப்பட்டது.

இவ்வாறு கையளிக்கப்பட்ட அஸ்தியின் இறுதி ஊர்வலமே இன்று நடைபெற்றது.

இதன்போது அஸ்தி நிலப்பாவாடை விரித்து மேளவாத்தியத்துடன் பாடையில் எடுத்துச் செல்லப்பட்டு கொட்டடி மயானத்தில் இறுதி நிகழ்வு இடம்பெற்றது.

இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.