அத தெரண யூடியூப் சேனலுக்கு சைபர் தாக்குதல்

அத தெரண தொலைக் காட்சியின் யூடியூப் சேனல் சைபர் தாக்குதல் குழுவினால் கைப்பற்றப்பட்டதாக தெரண தலைவர் திலித் ஜெயவீர தனது சமூக ஊடகம் மூலம் அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில், அதை கைப்பற்றிய குழு, அதன் பெயரை ‘கிரிப்டோ நியூஸ்’ என மாற்றி, இதுவரை சேர்க்கப்பட்ட வீடியோக்களை அகற்றிவிட்டது.

எனினும், சுமார் 5 மணி நேர செயல்பாட்டிற்குப் பிறகு அது மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.