இரண்டாம் நாள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள்…

இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஷர்துல் தாக்குர் 57 ரன்னும், விராட் கோலி 50 ரன்னும் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் வோக்ஸ் 4 விக்கெட், ராபின்சன் 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது. மலான் 26 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடந்தது. மலான் 31 ரன்னில் அவுட்டானார். பேர்ஸ்டோவ் 37 ரன்னும், மொயீன் அலி 35 ரன்னும் எடுத்தனர்.
ஒல்லி போப் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 81 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசியில் கிறிஸ் வோக்ஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து அவுட்டானார். இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், பும்ரா, ஜடேஜா தலா 2 விக்கெட்டும், ஷர்துல் தாகுர், சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நிதானமாக ஆடினர்.

இரண்டாம் நாள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 20 ரன்னுடனும், கே.எல்.ராகுல் 22 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.