கொழும்பில் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி!

கொழும்பு 1 – 15 வரையான பிரதேசங்களில் வசிக்கும் 20 – 30 வயதுகளுக்கு இடைப்பட்ட அனைவருக்கும் சினோபார்ம் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாளை காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை இந்தத் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கொழும்பு மாநகர சபையின் தொற்று நோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் தினுகா குருகே தமது ருவிட்டர் பக்கத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.