கொரோனாவால் மரணித்தவர்களுக்கு மனோ தலைமையில் அஞ்சலி நிகழ்வு.

கொரோனாவால் மரணித்த அனைத்து இலங்கையைர்களுக்குமான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தமிழ் முற்போக்குக் கூட்டணியினதும் ஜனநாயக மக்கள் முன்னணியினதும் தலைவர் மனோ கணேசன் எம்.பியின் தலைமையில் கொழும்பு முகத்துவாரம் காளி கோயில் முன்பாக இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான ஜி.விஷ்ணுகாந், சிவரஞ்சன், சிவகுமார், வசந்குமார் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.